இக்கல் வீச்சு சம்பவத்தில் இரு பிரிவைச் சேர்ந்த சுருளிப்பாண்டி(40), கருப்பசாமி(35), ராஜன் உள்ளிட்ட 7 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரைச் சேர்ந்தவர்களும் விருதுநகர் சூலக்கரை காவல் நிலையத்தில் புகார் செய்தனர். மேலும், பிரச்னை ஏற்படாமல் கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளிக்கிழமை 10 பேரை கைது செய்தனர். இதையடுத்து, கைது செய்தவர்களை உடனே விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார் தடுத்தி நிறுத்தினர்.