விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் உள்ளோம். நாங்கள் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு, திருநங்கைகளுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்களை முயற்சி செய்து குறைந்த அளவிலேயே பெற்று வருகிறோம். இதுவரையில் எங்கள் சங்கம் சார்பில் திருநங்கைகள் அடையாள அட்டை, ரேசன் கார்டு, இலவச வீட்டுமனைப்பட்டா, இலவச வீடு, உதவித் தொகை, மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை, உழவர் அட்டை, விலையில்லா மிக்ஸி கிரைண்டர் மற்றும் விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள் உள்ளிட்டவைகளும் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமியிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.