இதேபோல், ஊராட்சி தலைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு தலைவர் அச்சுறுத்தியதோடு, மாற்றி விடுவதாகவும் கூறியுள்ளார். அப்போது, தலைவர் மீது தவறில்லை என்றும், அதனால் நடவடிக்கை எடுக்கவும் மறுத்துள்ளார். இதைக் காரணமாக வைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்(ஊராட்சிகள்) மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மேலும், கிராம ஊராட்சிகளில் பசுமை குடியிருப்பு திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம் ஆகியவைகளில் பணம் வசூலித்து தருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். அதனால், நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி முறைகேடுகளில் ஈடுபடும் ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியரிடம் அளித்த அம்மனுவில் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.