நாளை (பிப். 23), நாளை மறுநாள் (பிப். 24) மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாக கூறி 7 சவரன் தங்கச் சங்கிலி திருட்டு

மாதனூர் அருகே செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாக கூறி 7 சவரன் தங்கச் சங்கிலியை ஒரு நபர் திருடிச் சென்றதாக ஆம்பூர் தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:24 pm

எம். அருண்குமார்

மாதனூர் அருகே செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாக கூறி 7 சவரன் தங்கச் சங்கிலியை ஒரு நபர் திருடிச் சென்றதாக ஆம்பூர் தாலுகா போலீஸார் திங்கள்கிழமை வழக்கு பதிவு செய்தனர்.

மாதனூர் அருகே வடகாத்திப்பட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த பழனியின் மனைவி  சுலோசனா (59).  இவர் வீட்டருகே உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் செல்போன் டவர் அமைக்க இடம் தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.  அந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாகவும், சிக்னல் சரியாக கிடைக்கிறதா என பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.   நிலத்தில் குழி தோண்டி அங்கு சிக்னல் வருகிறதா என பார்க்க தங்கச் சங்கிலியை அந்த குழியில் போட்டு பார்க்க வேண்டுமெனக் கூறி சங்கிலியை வாங்கி போட்டுள்ளார்.  பிறகு அந்த செயினுடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.  இதுகுறித்து சுலோசனா ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார்.  போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.