மாதனூர் அருகே வடகாத்திப்பட்டி பஜனை கோயில் தெருவை சேர்ந்த பழனியின் மனைவி சுலோசனா (59). இவர் வீட்டருகே உள்ள தனது நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் செல்போன் டவர் அமைக்க இடம் தேடிக்கொண்டிருப்பதாக கூறியுள்ளார். அந்த நிலத்தில் செல்போன் டவர் அமைக்க இடம் தேர்வு செய்வதாகவும், சிக்னல் சரியாக கிடைக்கிறதா என பார்ப்பதாகவும் கூறியுள்ளார். நிலத்தில் குழி தோண்டி அங்கு சிக்னல் வருகிறதா என பார்க்க தங்கச் சங்கிலியை அந்த குழியில் போட்டு பார்க்க வேண்டுமெனக் கூறி சங்கிலியை வாங்கி போட்டுள்ளார். பிறகு அந்த செயினுடன் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து சுலோசனா ஆம்பூர் தாலுகா போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.