விருதுநகர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாக கூட்டரங்கில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுப்பதற்கான விளக்க கூட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கி.கலாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூக்கையா முன்னிலை வகித்தார்.இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்(கிராம ஊராட்சிகள்) சிவராம்குமார் பங்கேற்று பேசியதாவது: கிராமங்களில் ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுவதை தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் ஊராட்சி பகுதிகளில் குழந்தைகள் விழுந்து மாவட்ட நிர்வாகத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கும் ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க வேண்டும்.