எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சியவர் கைது

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:21 pm

தமிழ்ச்செல்வன்

கொல்லிமலையில் சாராயம் காய்ச்சிய கூலித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

கொல்லிமலை வழப்பூர் நாடு அருகே குட்டுக்கிராயப்பட்டியைச் சேர்ந்த சந்திரசேகர்(38) கூலித்தொழிலாளி. இவர் தனது வீட்டில் 150 லிட்டர் சாராய ஊறல் வைத்திருந்ததுடன், பிராந்தியுடன் 25 பாட்டில்கள் வைத்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் பி.கண்ணம்மாள் உத்தரவின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் சபாபதி தலைமையில் அதிவிரைவுப்படையைச் சேர்ந்த 9 பேர் வழப்பூர் நாடு கிராமத்தில் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சந்திரசேகர் வீட்டில் இருந்த சாராய ஊறலை அழித்ததுடன், 25 பிராந்தி பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து சந்திசேகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.