எனவே இது தொடர்பாக மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதற்காகவே காவலர் மற்றும் பெண் காவலர் ஆகியோர் தனியாக நியமிக்க வேண்டும். அவர்கள் குழந்தைகள் தொடர்பான வழக்குகளை மட்டுமே கையாள வேண்டும். இவர்கள் அந்தந்த காவல் நிலைய பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நேரடியாகச் சென்று விழிப்புணர்ச்சியையும் ஏற்படுத்த வேண்டும். இது போன்றவைகளுக்கு சிறுமி மற்றும் சிறார் பாதுகாப்புக்கான சட்டங்கள்-2012 குறித்து ஒவ்வொரு பிரிவிலும் விளக்கமாக எடுத்துரைக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் சிறார்களை காவல் நிலையத்தில் வைத்து காவலர் சீருடையோடு விசாரணை செய்தால் பயந்த நிலையை அடையக்கூடும். அதனால், அக்குழந்தைகள் விரும்புகிற இடத்தில் வீடுகளிலே, அரசு பாதுகாப்பகத்திலேயே அன்போடு விசாரணையில் ஈடுபட வேண்டும் என மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எஸ்.மகேஸ்வரன் தெரிவித்தார்.