இந்த மாவட்டத்தில் குரூப்-4 தேர்வில் மொத்தம் 54223 பேர்கள் பங்கேற்க உள்ளனர். இத்தேர்வு விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை ஆகிய கல்வி மாவட்டங்களில் 119 தேர்வு மையங்களில் வருகிற 25-ம் தேதி நடைபெற இருக்கிறது. அதற்கான பணிகள் அனைத்தும் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும், மர்ம நபர்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட இருக்கிறது.இத்தேர்வுக்காக வந்துள்ள வினாத்தாள்கள் மற்றும் ஆவணங்கள் அனைத்தும் விருதுநகர், ராஜபாளையம், சாத்தூர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் திருச்சுழி ஆகிய சார்நிலைக் கருவூலங்களில் பாதுகாப்பாக வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இம்மையங்களில் 23-தேதி முதல் 25-ம் தேதி வரையில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்பு அளிக்க உள்ளனர். அதோடு, தீயணைப்பு வாகனங்களும் நிறுத்தப்படவும் உள்ளது.