/

திருச்சுழி அருகே வாகன விபத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளி சாவு

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் உருமன்(50). இவர் ஊர் ஊரக ஆடுகள் மேய்கத்து விளைநிலங்களில் கிடை அமர்த்தும்  தொழில் செய்து வருகிறார். எனவே வழக்கம் போல்

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:19 pm

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே வாகனம் மோதிய விபத்தில் ஆடுமேய்க்கும் தொழிலாளரி சம்பவ இடத்திலேயே இன்று உயிரிழந்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உசிலங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் உருமன்(50). இவர் ஊர் ஊரக ஆடுகள் மேய்கத்து விளைநிலங்களில் கிடை அமர்த்தும்  தொழில் செய்து வருகிறார். எனவே வழக்கம் போல் திருச்சுழி கரிசல்காட்டு பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச் சென்றார். அப்போது, எதிரே வேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது.இதில், உருமன் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் 2 செம்மறி ஆடுகளும் உயிரிழந்தது. இந்த விபத்து தொடர்பாக திருச்சுழி போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.