அருப்புக்கோட்டை சௌந்தரபாண்டியன் காலனியைச் சேர்ந்தவர் இளம்பூரணம்-உஷாராணி தம்பதியர் மகன்களான கணேஷ்பிரவு(11), கோமேஷ்வர்(7). இவர்கள் இருவரும் இப்பகுதியில் உள்ள கே.எஸ்.எஸ்.என்.தியாகராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளியில் கணேஷ்பிரவு 7-வகுப்பும், கோமேஷ்வர் இரண்டாவது வகுப்பும் படித்தும் வருகின்றனர்.இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் தம்பதியர் பணம் கட்டுவதற்காக கடந்த ஜூலை மாதம் சென்றுள்ளனர். அப்போது, அரசு நிர்ணயித்த கட்டணம் ஆண்டுக்கு ரூ.5500 விட கூடுதலாக ரூ.7500 வசூல் செய்து வந்தார்களாம். மேலும், பெற்றுக் கொண்ட பணத்திற்கு உடனே ரசீது வழங்க வேண்டும் என கேட்டுள்ளார். இது தொடர்பாக மெட்ரிக்குலேசன் கல்வி ஆய்வாளர் அலுவலகத்திற்கு புகார் செய்தார். அங்கு அலுவலர்கள் ரசீதுடன் புகார் செய்தால் தான் ஏற்றுக் கொள்வோம் எனத் தெரிவித்துள்ளனர்.