விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஆவுடையாபுரத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மூலம் வாறுகால் தூர்வாரும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இன்றும் வழக்கம் போல் ஈடுபட்டிருந்த நிலையில் தொழிலாளர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் குறைந்த அளவு கூலியாக ரூ.35 வழங்கி வருகின்றனர். அதேபோல், பதிவேடுகளில் கூடுதலாகவும் பதிவு செய்வதாகவும் தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்தக் கூலியை வைத்துக் கொண்டு குடும்பம் நடத்த முடியாத சூழ்நிலை இருக்கிறது.மேலும், பக்கத்து ஊராட்சிகளில் ரூ.70, முதல் ரூ.80 வரையில் நாள்தோறும் கூலியாக வழங்கப்படுகிறது. இங்குதான் குறைவாக வழங்கப்பட்டு வருவதாகக் கூறி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.