விருதுநகர் அருகே மாத்தநாயக்கன்பட்டி பவித்ரா நகரைச் சேர்ந்தவர் அற்புதராஜ்(60). இவரை விருதுநகர் அண்ணாமலைச்செட்டியார் தெருவை சேர்ந்த அண்ணாத்துரை(40) மற்றும் மணிகண்டன்(35) ஆகியோர் ரூ.5 லட்சம் வங்கியில் எளிதாக கடன் பெற்றுத் தருவதாக அணுகியுள்ளனர். அதற்கு, நிரப்பப்படாத தலா ரூ.1 லட்சம் வீதம் 5 காசோலைகளை கையொப்பம் இட்டு வங்கியின் கடன் பாதுகாப்புக்காக வழங்க வேண்டும் என தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு, என்னுடைய மனைவி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமையாசிரியராக பணியாற்றி வருகிறார். அவருடைய கணக்கிற்கு கடன் தொகை வரவு வைக்கும் படி கூறி காசோலைகளையும் அளித்துள்ளார்.