இதனால், நோயாளிகளுக்கு ஊசி போடவும், மருந்து கொடுக்கவும் மறுத்து வருகின்றனர். இது சரியல்ல. அவர்கள் போராட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும். அவர்கள் தங்களது நியாயமான கோரிக்கைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இந்திய மருத்துவக் குழுவில் வழிகாட்டுதல்படி, எந்தெந்த முறைகளில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டுமோ, அந்த முறைப்படிதான் மருத்துவ பேராசிரியர்கள் பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார்கள். அதன் அடிப்படையில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்துவதும், ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்துவதும் அடங்குகிறது. இப்பயிற்சிகள் பயிற்சி மருத்துவர்களின் பயிற்சி காலத்தில் முக்கியமானதாகும். ஆகவே, இதுபோன்ற பணிகளை செய்ய மாட்டோம் என்று கூறுவது பயிற்சி மருத்துவர்கள் பயிற்சியை முழுமையாக்காது. ஆகவே, பயிற்சி காலத்தில் பயிற்சியை முழுமையாக செயல்படுத்தாத பயிற்சி மருத்துவர்களுக்கு பயிற்சி முடித்த நிலையில், பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்க இயலாது. எனவே, பயிற்சி காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை ஏற்படும். ஆகவே, மத்திய மருத்துவக் குழுவின் வரன்முறைகளை பயிற்சியாக அளித்து வரும் நிலையில், அதை பயிற்சி மருத்துவர்கள் மேற்கொள்வது அவசியம்.