திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

வழித்தடப்பிரச்னையில் விவசாயி கழுத்து நெரித்து கொலை: 2 பெண்கள் உள்பட மூவர் கைது

வழித்தட பிரச்னையில் புதுச்சத்திரத்தில் விவசாயி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அவரது மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

News image
Updated On :3 ஜனவரி 2024, 1:07 pm

தமிழ்ச்செல்வன்

வழித்தட பிரச்னையில் புதுச்சத்திரத்தில் விவசாயி ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டார். பலத்த காயமடைந்த அவரது மகன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாமக்கல் புதுச்சத்திரம் அருகே கொளத்துப்பாளையம் ஒரத்துப்பாளையத்தைச் சேர்ந்த செல்லப்பனின் மகன் அத்தாயி(65). இவரது தோட்டத்துக்கு செல்லும் பாதை தொடர்பாக பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் மகன் குமாரசாமி(70) என்பவருடன் பிரச்னை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அத்தாயி தோட்டத்துக்கு செல்லும் பாதையை குமாரசாமி அடைத்து முள்வேலி ஏற்படுத்தியதாகத் தெரிகிறது. இதனால், அத்தாயி குமாரசாமியிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த குமாரசாமி தனது கையில் இருந்த கொடுவாளால் அத்தாயின் தலையில் இரு இடங்களில் வெட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அத்தாயி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இதைத்தொடர்ந்து, அத்தாயியின் மருமகன் பழனிவேலு(42), ஞாயிற்றுக்கிழமை இரவு குமாரசாமி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவரிடையே ஏற்பட்ட சண்டையில் பழனிவேலு குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த குமாரசாமியின் மகன் சீனிவாசனை பழனிவேலுவின் மனைவி பூங்கொடி(35), அவரது சகோதரி குப்பாயி(45) ஆகியோர் அடித்துக்கொலை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அப்போது சீனிவாசன் எழுப்பிய சத்தத்தை அடுத்து பழனிவேலு, பூங்கொடி, குப்பாயி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பலத்த காயமடைந்த சீனிவாசனை அப்பகுதி மக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தகவலறிந்த புதுசத்திரம் காவல் ஆய்வாளர் செல்லமுத்து(பொறுப்பு), உதவி ஆய்வாளர் இளங்கோவன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று குமாரசாமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். தொடர்ந்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து பழனிவேலு, பூங்கொடி, குப்பாயி ஆகிய மூவரையும் கைது செய்தனர். இந்த கொலைச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.