இதைத்தொடர்ந்து, அத்தாயியின் மருமகன் பழனிவேலு(42), ஞாயிற்றுக்கிழமை இரவு குமாரசாமி வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது இருவரிடையே ஏற்பட்ட சண்டையில் பழனிவேலு குமாரசாமியின் கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். அந்த நேரத்தில் அங்கு வந்த குமாரசாமியின் மகன் சீனிவாசனை பழனிவேலுவின் மனைவி பூங்கொடி(35), அவரது சகோதரி குப்பாயி(45) ஆகியோர் அடித்துக்கொலை செய்ய முயன்றதாகத் தெரிகிறது. அப்போது சீனிவாசன் எழுப்பிய சத்தத்தை அடுத்து பழனிவேலு, பூங்கொடி, குப்பாயி அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். பலத்த காயமடைந்த சீனிவாசனை அப்பகுதி மக்கள் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.