இந்து முன்னணி மாநிலத் தலைவர் அரசு ராஜா என்பவரின் மகன் பூபதிபாண்டியன். இவர் சித்தமருத்துவராகப் பணியாற்றுகிறார். இவருடன் 6 பேர் திசையன்விளையில் இருந்து காரில் நிலம் பார்க்க சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்துக்கு வந்தனர். அவர்கள் வந்த கார், பன்னம்பாறை விலக்கு அருகே வந்த போது கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தது. தனியார் பள்ளியின் அருகே திருப்பத்தில் வேகமாக வந்து பள்ளி சுற்றுச்சுவரில் மோதி கவிழ்ந்தது. இதில், பூபதி பாண்டியன், மருதநாச்சிவிளையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்துசாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.