வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு
/

மதுரை அருகே வைகை ஆற்றில் மூழ்கி கவுன்சிலர் மகள் பலி

மதுரை அருகே சோழவந்தானில் 16 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சப்பாணியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:26 am

ஜெயப்பாண்டி

மதுரை அருகே சோழவந்தானில் 16 வது வார்டு கவுன்சிலராக இருப்பவர் சப்பாணியம்மாள். இவரது மகள் முனீஸ்வரி அந்தப் பகுதியில் உள்ள பள்ளியில் 6ம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில், இன்று காலை அவர் வைகை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். தற்போது, சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வைகை ஆற்றில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், ஆழமான பகுதிக்குச் சென்ற முனீஸ்வரி தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டாராம். தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் முனீஸ்வரியின் சடலத்தை மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.