இதையடுத்து சிறுவன் செந்தில் சேலம் குழந்தைகள் பாதுகாப்பு குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இப்போது அவர் முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள தொன்போஸ்கோ அன்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தனது சொந்த ஊர் சேலம் என்று கூறும் சிறுவனுக்கு மேற்கொண்டு முகவரி தெரியவில்லை. தனது தந்தை பெயர் முருகேசன் என்று கூறும் அவர், தாயார் அன்னக்கொடி இறந்துவிட்டார் என்றும் தெரிவிக்கிறார்.தனது சகோதரிகள் உமா, பானுமதி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி என்றும் சகோதரர்கள் சீனு, குமார், இளையராஜா என்றும் அவர் கூறுகிறார். இதையடுத்து செந்திலின் குடும்பத்தைத் தேடும் பணியில் குழந்தைகள் நலக் குழுமம் ஈடுபட்டுள்ளது.