நவீன மயமாக்கப்பட்ட உள்நாட்டு விமான நிலையம் பயன்பாட்டிற்கு வந்த உடன் ஏற்கனவே உள்ள உள்நாட்டு விமான நிலையம் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் நிலையே உள்ளது. எனவே விமான நிலையத்தின் நவீன முனையத்திற்கும் பெருந்தலைவர் காமராஜர் பெயரே நீடிக்க வேண்டும்.அதேபோல், தலைநகர் புதுதில்லியில் ஆசியாவின் 3-வது மிகப்பெரிய விமான நிலையத்திற்கு முன்னாள் பாரத பிரதமர் இந்திரா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்த நிலையம் விரிவாக்கம் பணிகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரும் அவர் பெயரே நீடிக்கிறது. அதேபோல், மும்பையில் சத்ரபதி சிவாஜி பெயரில் உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்ட பின்னரும் பழைய பெயரிலேயே செயல்பட்டு வருகிறது.இதேபோல், விரிவாக்கப்பட்ட சென்னை விமான முனையத்திற்கும் காமராஜர் பெயரே நீடிக்க உத்தரவிட வேண்டும்.