தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

ஏழுமலையான் சுப்ரபாத சேவையில் ஆரத்தி ரத்து

திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவையின் போது கொடுக்கப்படும் பிரத்யேக ஆரத்தியை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

News image
Updated On :11 ஏப்ரல் 2013, 12:08 pm

திருமலை ஏழுமலையானின் சுப்ரபாத சேவையின் போது கொடுக்கப்படும் பிரத்யேக ஆரத்தியை ரத்து செய்துள்ளதாக தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.

திருமலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் இணை அதிகாரி சீனிவாசராஜூ, தலைமை அர்ச்சகர், ஜீயங்காரர்கள் மற்றும் 5 ஆச்சார்யர்கள் சேர்ந்து செவ்வாய்க்கிழமை ஏழுமலையானின் நித்திய பூஜை கைங்கர்யங்கள் செயல்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர். ஏழுமலையானுக்கு தற்போது சுப்ரபாத சேவை நடைபெறும் விதானம் குறித்து கலந்தாலோசித்தனர்.

பின்னர் சுப்ரபாத சேவை நடைப்பெறும் சமயங்களில் ஏழுமலையான் அப்போது தான் துயில் எழுந்திருப்பதால் அவருக்கு இடையூறு செய்யும் விதமாக ஆரத்திகள் கொடுக்க கூடாது எனவும் கருடாழ்வாருக்கும் ஏழுமலையானுக்கும் இடையில் எந்த பக்தர்களும் சுப்ரபாத சேவையின் போது குறுக்கே நிற்கக்கூடாது எனவும் நிர்ணயிக்கப்பட்டது.

மேலும் சுப்ரபாத சேவையின் போது சுப்ரபாதம் சொல்லும் போது கண்டிப்பாக அனைத்து பக்தர்களும் அமைதியாக இருக்க வேண்டும். சுப்ரபாதம் சொல்லி முடித்த பிறகு நடைப்பெறும் வேதபாராயணத்தின் போது அரசாங்க ஆரத்தி மட்டும் அனுமதிக்கப்படும் என்று கூறினார். இது வியாழக்கிழமை முதல் அமல் படுத்தப்படுவதாகவும் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.