டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் : 221 விடைத்தாள்கள் காணவில்லை

விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.

News image
Updated On :3 ஜனவரி 2024, 11:04 am

சா. ஜெயப்பிரகாஷ்

விழுப்புரம் அருகே 221 மாணவர்களின் 10ம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் விடைத்தாள்களைக் காணவில்லை.

10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில், நடந்து முடிந்த ஆங்கிலம் முதல் தாள் தேர்வில், சத்தியமங்கலத்தில் ஒரு பள்ளியில் இருந்து திண்டிவனத்துக்கு அனுப்பப்பட்ட விடைத்தாள்களில், 221 விடைத்தாள்களை மட்டும் காணவில்லை என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 25 மாணவர்கள், மேல்பாப்பாம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 176 பேர், தனியார் மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 20 பேர் என மொத்தம்  221 பேர் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதினர்.

தேர்வு முடிந்ததும், சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் விடைத்தாள்கள் கொடுத்தனுப்பபப்பட்டு, அவைகள் திண்டிவனம் வந்து அங்கிருந்து ரயிலில் திருச்சிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. சத்தியமங்கலம் போஸ்ட் ஆபிஸில் இருந்து தபால் ஊழியர் விடைத்தாளைக் எடுத்துக்கொண்டு செஞ்சியில் இருந்து தனியார் பேருந்து மூலமாக திண்டிவனம் கொண்டு வரும் வழியில் 221 விடைத்தாள்கள் காணாமல் போயுள்ளன. இதையடுத்து அவர் சத்தியமங்கலம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விடைத்தாள்கள் காணாமல் போனது குறித்து துணை ஆட்சியர் மீனா பிரியதர்ஷினி, வட்டாட்சியர் ஜெயக்குமார் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே கடலூரில் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் இரண்டாம் தாள் விடைத்தாள்கள் சேதமடைந்ததை அடுத்து இன்று மேலும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது மாணவர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.