மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விஜயராஜா குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: நிலத் தரகர்கள் சங்கம் கோரிக்கை

சேலம், செப். 23: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நிலத்தரகர்கள் சங

Updated On :26 செப்டம்பர் 2012, 6:33 am
சேலம், செப். 23: இலங்கை அதிபர் ராஜபட்சவின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தீக்குளித்து உயிரிழந்த விஜயராஜாவின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும் என்று நிலத்தரகர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
 சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட நிலத்தரகர்கள் சங்கத்தின் கூட்டம் சேலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் சி.அண்ணாதுரை தலைமை தாங்கினார். மாவட்டச் செயலர் எம்.மாதையன் வரவேற்றார்.
 கூட்டத்தில், நிலத்தின் வழிகாட்டி மதிப்பு உயர்வால் தமிழகத்தில் சுமார் 10 லட்சம் நிலத்தரகர்கள் வேலை வாய்ப்பின்றி தவிக்கும் சூழல் உருவாகியுள்ளது. எனவே அரசின் வழிகாட்டி மதிப்புக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள இடங்களுக்கு சிறப்பு அதிகாரியை நியமித்து ஆய்வு செய்து வழிகாட்டி மதிப்பை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 காவிரி நதி நீர் பிரச்னையில் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமலும், தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்க மறுத்து தமிழக விவசாயிகளுக்கு விரோதமாகவும் நடந்து கொள்ளும் கர்நாடக அரசு மீது பிரதமர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 இலங்கை அதிபரின் இந்திய வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து சேலத்தில் தீக்குளித்து உயிரிழந்த சேலம் இளைஞர் விஜயராஜாவின் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.10 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாவட்ட நிலத்தரகர்கள் சங்கத் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், செயலர் எம்.கமால் பாஷா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் சி.குமார், செயலர் டி.முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.