ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

ராமநாதபுரத்தில் வீட்டில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை பறிமுதல்

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம்  வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்

News image
Updated On :2 ஜனவரி 2024, 3:38 pm

சி.வ.சு. ஜெகஜோதி

ராமநாதபுரம், மே.1: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லானி ஊராட்சி ஒன்றியம் களிமண் குன்று கிராமம்  வைரவன் என்பவர் ஏப்ரல் 24-ம் தேதி வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டியபோது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று கிடைத்தது. இதை அவர் யாரிடமும் தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். இந்த நிலையில் அவருடன் அஸ்திவாரம் தோண்டிய செல்லப்பா என்பவருக்கு திடீரென அம்மை போட்டுள்ளது.

இதனால் அவர் பெருமாள் சிலை கண்டெடுக்கப்பட்டது குறித்து விஏஓ பாலையாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததன்பேரில்

வட்டாட்சியர் அன்புநாதன், துணை வட்டாட்சியர் தமீம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று சிலையை மீட்டு தொல்பொருள் துறையிடம் ஒப்படைத்தனர்.

ஒன்றரை அடி உயரமுள்ள அந்த சிலையின் மதிப்பு 5 கோடி ரூபாய் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.