/

மதுரையில் சாலைமறியல்: சுமார் 750 பேர் கைது

மதுரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 750க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:57 pm

ஜெயப்பாண்டி

மதுரையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 750க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இன்று அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ரயில் நிலையம் முன்னே குவிந்த அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மிகவும் நெருக்கடியான அந்தப் பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. போலீஸார் முன்னதாக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில், மதுரை நகரில் சாலை மறியலில் ஈடுபட்ட 750க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் என்றும், மதுரை புறநகரில் 210 பேர் கைது செய்யப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.