/

மதுரை அரசு பொது மருத்துவமனையில் ஒப்பந்த பணியாளர்கள் : ஆட்சியர்

மதுரை அரசு பொது மருத்துவமனையில் 100 ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.

News image
Updated On :2 ஜனவரி 2024, 7:51 pm

ஜெயப்பாண்டி

மதுரை அரசு பொது மருத்துவமனையில் 100 ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா கூறினார்.

மதுரை அரசு பொது மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருத்துவமனையில் சுகாதாரத்தை மேம்படுத்த இயலாத நிலையில் 62 நிரந்தர பணியாளர்கள் உள்ளனர். அவர்களால் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஈடுககொடுக்க முடியவில்லை. எனவே, நோயாளிகளின் வசதிக்காகவும், மருத்துவமனையின் சுகாதாரத்தை மேம்படுத்தவும் கூடுதலாக 100 ஒப்பந்தப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

இதற்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.