தமிழக சட்டப் பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கட்சி உறுப்பினர்-நான்குனேரி) கேள்வி எழுப்பினார். அவர், "தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கு விலையில்லா ஆடு, மாடுகளை வழங்கி வருகிறது. நான்குனேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள சுமார் 15 கிராமங்களில் ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆடுகளும், மாடுகளும், கோழிகளும், கோழிப்பண்ணைகளும் உள்ளன. எனவே, நான்குனேரியில் உள்ள கால்நடை மருந்தகத்தை கால்நடை மருத்துவமனையாக தரம் உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்குமா?” என்று கேள்வி எழுப்பினார்.