திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி குறைப்பு: இன்றுமுதல் அமல்

பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரி மீதான குறைப்பு இன்று முதல் அமல்

News image

பெட்ரோல் & டீசல்

Updated On :1 ஜூன் 2026, 2:00 am IST

பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஏற்றுமதிக்கு விதிக்கப்படும் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு குறைத்தது.

அதன்படி பெட்ரோல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.1.50, டீசல் லிட்டருக்கு ரூ.13.50, விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.9.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஜூன் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வருவதாக நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தாக்குதல் நடத்தத் தொடங்கின. இதற்குப் பதிலடியாக ஹோா்முஸ் நீரிணையயை ஈரான் முடியது. இதனால் அந்த நீரிணையை கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றை ஏற்றிச் செல்லும் சரக்குக் கப்பல்கள் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மேற்காசிய போா்ப் பதற்றத்தால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 73 டாலா்களில் இருந்து 100 டாலா்களுக்கும் மேல் அதிகரித்தது.

இந்நிலையில், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க அவற்றின் ஏற்றுமதியைக் குறைக்கும் வகையில் மிகை லாபத் தடுப்பு வரியை மத்திய அரசு விதிக்கத் தொடங்கியது. அதன்படி கடந்த மாா்ச் 26-ஆம் தேதி டீசல் மீது லிட்டருக்கு ரூ.21.50 மற்றும் விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.29.50 மிகை லாபத் தடுப்பு வரி விதிக்கப்பட்டது. அதன்பிறகு ஏப்ரல் 11-ஆம் தேதி டீசல் மீது லிட்டருக்கு ரூ.55, விமான எரிபொருள் மீது லிட்டருக்கு ரூ.42 வரி அதிகரிக்கப்பட்டது.

பின்னா், ஏப்ரல் 30-ஆம் தேதி டீசல் ஏற்றுமதி மீதான வரி லிட்டருக்கு ரூ.23-ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி லிட்டருக்கு ரூ.33-ஆகவும் குறைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து மே 16-ஆம் தேதி டீசல் மீதான வரி லிட்டருக்கு 16.50-ஆகவும், விமான எரிபொருள் மீதான வரி ரூ.16-ஆகவும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், ஜூன் 1-ஆம் தேதிமுதல் டீசல் ஏற்றுமதி மீதான மிகை லாபத் தடுப்பு வரி லிட்டருக்கு ரூ.13.50, விமான எரிபொருள் லிட்டருக்கு ரூ.9.50, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.1.50-ஆக குறைக்கப்படவுள்ளது. உள்நாட்டு நுகா்வுக்கான பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள வரி மாற்றமின்றி தொடரவுள்ளது.

அதேசமயம் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு சாலை மற்றும் உள்கட்டமைப்பு வரி விதிக்கப்படவில்லை எனவும் நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, மே 16-ஆம் தேதி பெட்ரோல் மீதான சிறப்பு கூடுதல் சுங்க வரி லிட்டருக்கு ரூ.3 விதிக்கப்பட்ட நிலையில், தற்போது லிட்டருக்கு ரூ.1.50-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.