திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையிலான... பிரியங்க் கார்கே கூறியதென்ன?

கர்நாடகத்தில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சி குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்தது தொடர்பாக...

News image

காங்கிரஸ் தலைவர் பிரியங்க் கார்கே. - படம் - ஏஎன்ஐ

Updated On :30 மே 2026, 12:59 pm IST

கர்நாடகத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று முன்னாள் கர்நாடக அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான பிரியங்க் கார்கே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.

முன்னதாக, 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தபோது, முதல்வர் பதவிக்கு சித்தராமையா, டி.கே. சிவகுமார் இடையே கடுமையான போட்டி நிலவியது.

இந்தச் சூழலில், இருவரையும் சமாதானப்படுத்திய காங்கிரஸ் மேலிடம், சுழற்சி முறையில் இருவரும் தலா இரண்டரை ஆண்டுகால முதல்வர் பதவிவகிக்கும் சமரச திட்டத்தை ஏற்று, சித்தராமையா முதல்வரானார்.

இரண்டரை ஆண்டுகளுக்கு மேலானதைத் தொடர்ந்து, சித்த ராமையாவை காங்கிரஸ் தலைமை ராஜிநாமா செய்ய உத்தரவிட்டது. அதன்படி, அவர் ராஜிநாமா செய்ததால் அடுத்த ஆட்சியை அமைப்பது குறித்து கர்நாடக காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு பெங்களூரில் உள்ள விதான சவுதாவில் நடைபெறுகிறது. 

இது குறித்து பிரியங்க் கார்கே தெரிவித்ததாவது:

காங்கிரஸ் சட்டப்பேரவைக் குழு கூட்டம் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. இந்தக் குழு முதலில் சட்டப்பேரவைத் தலைவரை முடிவு செய்யும். அந்தத் தகவல் ஆளுநருக்கு அனுப்பப்படும். அதன் பிறகு, என்ன நடக்கும் என்ற அனைத்தும் சட்டப்பேரவைக் குழுவிடமே விடப்படும்.

முதல்வர் ராஜிநாமா செய்துவிட்டார். அமைச்சரவையும் கலைக்கப்பட்டது. அடுத்த ஆட்சியில் யார் இடம் பெறுவார் என்பதை காங்கிரஸ் தலைமை முடிவு செய்ய வேண்டும். ஆனால், யார் ஆட்சிக்கு வந்தாலும், சித்தராமையா தலைமையில் நடைபெற்ற பொருளாதார மற்றும் சமூகப் பணிகளை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துவோம் என்று தெரிவித்தார்.

Summary

Former Karnataka Minister and Congress leader Priyank Kharge stated on Saturday that, regardless of who comes to power in Karnataka, We will continue to implement the works carried out under the leadership of Siddaramaiah.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.