திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ராகுல் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்: பாஜக

காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏற்பட்ட முழுமையான தோல்வி பற்றி..

News image

சுதான்ஷு திரிவேதி - file photo

Updated On :27 மே 2026, 4:24 pm IST

வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைக் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்ட முழுமையான தோல்வி என பாஜக விமர்சித்துள்ளது.

வாக்காளர் பட்டியலின் 'சிறப்புத் தீவிரத் திருத்தத்தை' மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்திற்கு உள்ள அதிகாரத்தை உச்ச நீதிமன்றம் திங்களன்று உறுதி செய்தது. இந்தச் செயல்பாடு நியாயமான தேர்தல்களை நடத்துவதற்கான அரசியலமைப்பு ஆணையில் புதிய உயிரூட்டத்தை அளிப்பதாகத் தெரிவித்தது.

தேர்தல் ஆணையத்திற்கு ஒரு பெரும் வெற்றியைப் பெற்றுத்தரும் வகையில், இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த நடவடிக்கை சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் எனும் அரசியலமைப்புத் தேவையை முன்னெடுத்துச் செல்வதாகவும் தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்துக் கருத்துத் தெரிவித்த பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதான்ஷு திரிவேதி கட்சித் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இது காங்கிரஸ் கட்சிக்கும், குறிப்பாக ராகுல் காந்திக்கும் ஏற்பட்ட முழுமையான தோல்வியாகும். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் நெறிமுறை, அரசியல் மற்றும் அரசியலமைப்பு ஆகிய மூன்று பரிமாணங்களிலும் முழுமையாகச் சரிந்துவிட்டன.

இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் ராகுலின் சோம்பலும், அரசியல் இயலாமையை மறைப்பதற்காக எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக அவர் முன்வைத்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் தோல்வியடைந்துவிட்டன.

காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும், அவதூறான மொழியைப் பயன்படுத்துவதைக் கைவிட வேண்டும் என அவர் கூறினார்.

எஸ்ஐஆர் நடைமுறை குறித்து ராகுல் பொய்களைப் பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டிய திரிவேதி உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு காங்கிரஸின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாக அவர் கூறினார்.

Summary

The BJP on Wednesday termed the Supreme Court's verdict on the SIR a "complete defeat" of the Congress and other opposition parties on "moral, political and constitutional" grounds, and asked Rahul Gandhi to introspect

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.