ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் குல்மார்க் பகுதியில் ஆசியாவின் உயரமான ரோப்வே கேபிள் கார் சேவைகளுள் ஒன்றான குல்மார்க் கோண்டாலாவில் திங்கள்கிழமை(மே 25) ஏற்பட்ட தொழில்நுட்ப பழுதால் சுமார் 300 பயணிகள் அந்தரத்தில் சிக்கி தவித்தனர்.
அவர்களை மீட்கும் பணிகளில் பேரிடர் மீட்புக் குழுக்கள் ராணுவ உதவியுடன் சம்பவ இடத்தில் தீவிரமாக ஈடுபட்டன. சுமார் ஆறு மணி நேரமாக நடைபெற்ற மீட்பு பணி இன்றிரவில் வெற்றிகரமாக முடிவடைந்து பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 500 அடி உயரத்தில் உள்ள 65 கேபின்களில் சிக்கிய 300 பயணிகளை மீட்கும் சவாலான பணியை வெற்றிகரமாக முடித்த பேரிடர் மீட்பு குழுவினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்தார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைதளப் பதிவில், “காஷ்மீரின் குல்மார்க்கில் அந்தரத்தில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகளை பத்திரமாக மீட்டமைக்காக இந்தியாவின் பேரிடர் சேவை படைகளுக்குப் பாராட்டுகள்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படைகளையும் ராணுவ வீரர்களையும் உள்ளூர் போலீஸார் மற்றும் அரசு நிர்வாகத்தையும் உள்ளடக்கிய பேரிடன் மீட்புக் குழுக்கள் 6 மணி நேர மீட்பு பணிக்குப் பின், 65 கேபிள் கார்களில் பரிதவித்த பயணிகளை மீட்டனர். அவர்களுடைய திறனுக்கு இந்த நாடு தலைவணங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Summary
Rescue operations conclude in Jammu and Kashmir's Gulmarg after gondola malfunctions; all stranded passengers evacuated, officials say.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









