பஞ்சாபி பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி அறையில் பி.டெக் படித்துவந்த மாணவர் ஒருவர் சடலமாகக் மீட்கப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்தது.
உயிரிழந்தவர், பஞ்சாப் மாநிலம், தர்ன் தாரன் மாவட்டத்தின் பிங் காங் கிராமத்தைச் சேர்ந்த வருண் பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டது.
விடுதியில் தங்கியிருந்த மற்றொரு மாணவர் தனது சில தனிப்பட்ட பொருள்களை எடுப்பதற்காக புதன்கிழமை (மே 20) இரவு அறைக்குச் சென்றபோது, இந்தச் சம்பவம் தெரியவந்தது. உள்ளே நுழைந்த அந்த மாணவர், வருண் ப்ரீத் அந்த அறையில் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டார்.
அதன்பின், வளாகத்திலேயே உள்ள மருத்துவக் குழுவுக்கு தகவல் அளிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வருண் ப்ரீத்-ஐ பரிசோதித்துப் பார்த்ததில் அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.
இதைப் பற்றி, விடுதி பொறுப்பாளர் கூறுகையில், ”இந்த உயிரிழப்புக்கான உண்மையான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. உயிரிழந்த மாணவரின் உடல் கூராய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் அறிக்கை வெளியான பிறகே தெளிவான விளக்கத்தைத் தர முடியும்” எனத் தெரிவித்தார்.
Summary
The police stated on Thursday that a B.Tech student was found dead in his hostel room on the Punjabi University campus.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










