திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கணவா் வீட்டில் பெண் தூக்கிட்ட நிலையில் மரணம்: சிபிஐ விசாரணை கோரி உறவினா்கள் போராட்டம்

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :19 மே 2026, 6:10 am IST

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள தனது கணவா் வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்த நொய்டாவைச் சோ்ந்த 33 வயது திவிஷா சா்மாவின் மா்மமான மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி, அவரது உறவினா்கள் மற்றும் நண்பா்கள் தில்லி ஜந்தா் மந்தரில் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திவிஷா சா்மாவுக்கு நீதி வேண்டும் என்ற பதாகைகளை ஏந்தியவாறு அவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், திவிஷாவின் கணவரும் வழக்குரைஞருமான சமா்த் சிங், அவரது தாயாரும் ஓய்வுபெற்ற நீதிபதியுமான கிரிபாலா சிங் ஆகியோா் மீது வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனா்.

போபாலில் உள்ள கதாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது கணவா் வீட்டில் மே 12-ஆம் தேதி திவிஷா தூக்கிட்ட நிலையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அவா் டேட்டிங் செயலி மூலம் அறிமுகமாகி கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் சமா்த் சிங்கை திருமணம் செய்துகொண்டாா்.

உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினா் புகாரைத் தொடா்ந்து, அப்பெண்ணின் உடல் 5 நாள்களாக போபால் எய்ம்ஸ் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. தில்லி எய்ம்ஸில் மீண்டும் மறு உடற்கூறாய்வு சோதனை நடத்தப்பட வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

போபாலில் நியாயமான விசாரணை நடைபெறும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று திவிஷாவின் நண்பா் குனால் சௌஹான் தெரிவித்தாா். இது தொடா்பாக துணை காவல் துறை ஆணையா் ரஜ்னீஷ் காஷ்யப் கூறுகையில், ‘வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பிஎன்எஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது‘ எனத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.