திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலி!

சிகாகோ சாலை விபத்தில் இந்திய மாணவி பலியானது பற்றி...

News image

நவ்யா கடுசு - EPS

Updated On :18 மே 2026, 12:41 pm IST

சிகாகோவில் படித்துவந்த இந்திய மாணவி சாலை விபத்தில் சிக்கி சனிக்கிழமை பலியானார்.

தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தைச் சேர்ந்த நவ்யா கடுசு (வயது 25), சிகாகோவில் தங்கிப் படித்து வந்த நிலையில், சனிக்கிழமை இரவு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார்.

இவருடன் பயணித்த 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி?

இண்டியானா மாகாணம், லேக் கவுண்டியில் உள்ள கிரவுன் பாயிண்ட் அருகே நெடுஞ்சாலையில் சனிக்கிழமை நள்ளிரவு 11.15 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக காவல்துறையினர் தெரிவித்ததாவது:

”இயந்திரக் கோளாறு காரணமாக நெடுஞ்சாலையில் மெதுவாக சென்று கொண்டிருந்த வாகனம் மீது நவ்யா உள்ளிட்டோர் சென்ற மினி வேன் மோதியுள்ளது. இதில், நிலை தடுமாறிய மினி வேன் சாலையோர வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளானது.

மினி வேனின் முன்புறம் மட்டுமே இரண்டு இருக்கைகள் இருந்ததாகவும், பின்புறம் மாம்பழப் பெட்டிகள் மேல் 5 பேர் அமர்ந்து, சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நவ்யா, சனிக்கிழமை நள்ளிரவு 12.16 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நவ்யாவின் மரணத்துக்கு சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. மேலும், அவரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்துள்ளது.

Summary

Indian Student Killed in Chicago Road Accident!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.