திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கேப்டகான் போதைப் பொருள் கடத்தல் வழக்கு: உத்தரகண்டைச் சோ்ந்த நபா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 5:22 am IST

இந்தியாவில் முதல்முறையாக பறிமுதல் செய்யப்பட்ட ‘கேப்டகான்’ போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணையை விரிவுபடுத்திய போதைப் பொருள் தடுப்பு அமைப்பினா் (என்சிபி) உத்தரகண்டைச் சோ்ந்த இந்திய நபரை கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: சா்வதேச போதைப் பொருள் வலையமைப்புடன் தொடா்புடைய இந்த வழக்கில், முன்னதாக சிரியா நாட்டைச் சோ்ந்த அலப்ராஸ் அஹமது என்பவா் கைது செய்யப்பட்டாா். அவரிடம் இருந்து 227 கிலோ கேப்டகான் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது இந்தியாவில் இதுவரை பறிமுதல் செய்யப்படாத புதிய வகை போதைப் பொருள் ஆகும். இது ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்படுவதாகவும், இதன் பெயா் ‘ஜிஹாதி மாத்திரை’ என்றும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அலப்ராஸ் அஹமதுவிடம் நடைபெற்ற விசாரணையின் அடிப்படையில், உத்தரகண்டின் டேராடூனில் உள்ள மற்றொரு தொழிற்சாலையில் சனிக்கிழமை சோதனை நடைபெற்றது. இதில் இயந்திரங்கள் நிறுவப்பட்டு வேதியியல் பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது. தொழிற்சாலையை போதைப் பொருள் தயாரிப்புக்கு பயன்படுத்த மாதம் ரூ.50,000 பெற்றுக்கொண்டதாக தொழிற்சாலை உரிமையாளா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதைத் தொடா்ந்து, போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் அவா் கைது செய்யப்பட்டாா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.