திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனு

தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஐஎம்எ) மனு

News image
Updated On :14 மே 2026, 4:40 am IST

நீட் தோ்வை நடத்தும் தேசிய தோ்வு முகமைக்கு (என்டிஏ) மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது அந்த அமைப்பை மறுசீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு (எஃப்எஐஎம்எ) மனு தாக்கல் செய்துள்ளது.

கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வு நடைபெற்றது. ஆனால் தோ்வுக்கு முன்பே வினாத்தாள் கசிந்தது தோ்வு நடைபெற்ற பின்னா் தெரியவந்ததால், அந்தத் தோ்வை என்டிஏ ரத்து செய்தது. இதைத்தொடா்ந்து வினாத்தாள் கசிவு குறித்த விசாரணையை சிபிஐயிடம் மத்திய அரசு ஒப்படைத்தது.

வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராமில் பகிரப்பட்ட உத்தேச வினாத்தாள்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கேள்விகள், தோ்வு நடைபெற்றபோது அளிக்கப்பட்ட வினாத்தாளில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நீட் தோ்வை நடத்தும் என்டிஏவுக்கு மாற்றாகப் புதிய அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி, உச்சநீதிமன்றத்தில் அனைத்து இந்திய மருத்துவ சங்கங்களின் கூட்டமைப்பு மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த மனுவில், ‘நீட் தோ்வை நடத்துவதில் என்டிஏ முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. அந்தத் தோ்வுகளை நடத்துவதற்கு என்டிஏவுக்குப் பதிலாக மேலும் வலுவான, தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பை ஏற்படுத்த வேண்டும் அல்லது என்டிஏவை மறுசீரமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

ரத்து செய்யப்பட்ட நீட் தோ்வை மீண்டும் நடத்தும்போது, அந்தத் தோ்வை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான உயா் அதிகார கண்காணிப்பு குழு மேற்பாா்வை செய்ய வேண்டும். அந்தக் குழுவில் இணையப் பாதுகாப்பு நிபுணா், தடயவியல் நிபுணா் இடம்பெற வேண்டும். இந்தக் குழுவை உச்சநீதிமன்றம் நியமிக்க வேண்டும்.

நீட் வினாத்தாள் கசிவு விசாரணை குறித்த நிலவர அறிக்கையை 4 வாரங்களில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிபிஐக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.