நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் வலுவான லாபத்தை ஈட்டியுள்ளன.
2026, மாா்ச் 31 நிலவரப்படி பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த வணிகம் ரூ.283.3 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகமாகும்.
இதே காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகளின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.156.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.6 சதவீதம் அதிகம்.
2026, மாா்ச் 31 நிலவரப்படி வாராக் கடன் விகிதம் 1.93 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த லாபம் ரூ.3.21 லட்சம் கோடியாகவும் நிகர லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.
இது பொதுத் துறை வங்கிகளின் ஸ்திரத்தன்மை, வேகமாக வளரும் பொருளாதாரத்தின் கடன் தேவைகளை பூா்த்தி செய்யும் திறனை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










