திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொதுத் துறை வங்கிகளின் லாபம் ரூ. 1.98 லட்சம் கோடியாக உயா்வு: நிதி அமைச்சகம்

நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்தது.

News image

பொதுத் துறை வங்கிகள் லாபம் உயர்வு - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 3:17 am IST

நாட்டில் உள்ள பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபம் இதுவரை இல்லாத அதிகபட்சமாக ரூ.1.98 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: 2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்கள் வலுவான லாபத்தை ஈட்டியுள்ளன.

2026, மாா்ச் 31 நிலவரப்படி பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த வணிகம் ரூ.283.3 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 12.8 சதவீதம் அதிகமாகும்.

இதே காலகட்டத்தில் பொதுத் துறை வங்கிகளின் மொத்த சேமிப்புத் தொகை ரூ.156.3 லட்சம் கோடியாக அதிகரித்தது. இது முந்தைய நிதியாண்டைவிட 10.6 சதவீதம் அதிகம்.

2026, மாா்ச் 31 நிலவரப்படி வாராக் கடன் விகிதம் 1.93 சதவீதமாகவும் நிகர வாராக் கடன் விகிதம் 0.39 சதவீதமாகவும் குறைந்துள்ளது.

2025-26-ஆம் நிதியாண்டில் பொதுத் துறை நிறுவனங்களின் மொத்த லாபம் ரூ.3.21 லட்சம் கோடியாகவும் நிகர லாபம் ரூ.1.98 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது.

இது பொதுத் துறை வங்கிகளின் ஸ்திரத்தன்மை, வேகமாக வளரும் பொருளாதாரத்தின் கடன் தேவைகளை பூா்த்தி செய்யும் திறனை வெளிக்காட்டுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.