ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

நீட் தேர்வில் முறைகேடு! ஆயுர்வேத மாணவர் கைது! மாறுவேடத்தில் இருந்தவர்!

நீட் தேர்வில் முறைகேடு விவகாரத்தில் ஆயுர்வேத மாணவர் கைது செய்யப்பட்டார்.

News image

நீட் தேர்வு - பிடிஐ

Updated On :12 மே 2026, 6:17 pm IST

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில், ஆயுர்வேத மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, அவர் மாறுவேடத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக, தேர்வு நடந்து நான்கு நாள்களுக்குப் பின் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், மே 3 ஆம் தேதி நடந்த நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. விரைவில் மறுதேர்வு தேதி அறிவிக்கப்படும் என்றும், மீண்டும் கட்டணம் செலுத்தத் தேவையில்லை, ஏற்கனவே செலுத்திய கட்டணமும் திருப்பி அளிக்கப்படும் என்றும் அறிவிப்புகள் வெளியாகின.

மாதிரி வினாத்தாள் என்ற பெயரில் கையால் எழுதப்பட்ட ஒரு வினாத்தாள் தேர்வுக்கு சரியாக 42 மணி நேரத்துக்கு முன்பு வாட்ஸ்ஆப்களில் பரவிய நிலையில் அதில் இருந்த 120 கேள்விகள் நீட் வினாத்தாளிலும் இடம்பெற்றிருந்தன என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், நாசிக்கில் இளநிலை ஆயுர்வேத மருத்துவம் படித்துவந்த சுபம் கெயிர்நர் என்ற மாணவரை மகாராஷ்டிர காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த மாணவரின் இருப்பிடத்திலிருந்துதான் அந்த வினாத்தாள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் அதனை டிஜிட்டல் நெட்வொர்க் மூலம் மற்றவர்களுக்குக் கசியவிட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இவரிடம் விசாரணை நடத்த மும்பையிலிருந்து சிபிஐ குழு விரைந்துள்ளது. இவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க மாறுவேடத்தில் சுற்றித்திரிந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.