இந்தியாவில் ஜனநாயகம் வெற்றி பெற நீதிமன்றங்களும், அரசமைப்பு சட்டமும் முக்கிய பங்காற்றி இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் மத்திய அரசின் சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா எழுதிய நூல்களின் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று, அமித் ஷா பேசியதாவது:
1947-ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும் கொண்டு வந்த திருத்தங்கள் ஒரு துளி ரத்தம் கூடச் சிந்தாமல் (எந்தவித அசம்பாவிதமும் இன்றி) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நமது நாட்டில் ஜனநாயகம் எந்த அளவு மிகவும் ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை காட்டுகிறது. இந்த சாதனையைப் புரிவதற்கு, நீதிமன்றங்களும், அரசமைப்பு சட்டமும் முக்கியப் பங்காற்றியுள்ளன.
நாடு முழுவதும் மக்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால், அரசமைப்புச் சட்டம் தங்களைக் காக்கும் என நம்புகின்றனா். மக்களின் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், நீதிமன்றங்களின் கதவுகள் திறக்கப்படும். அதேபோல், சாமானிய மனிதரின் குரல் ஒடுக்கப்பட்டால், அவா்களுக்கு நீதிமன்றங்கள் உறுதுணையாக இருக்கும். சாமானிய மனிதனின் நம்பிக்கை, சமூகத்தின் செயல்பாடு, தேசத்தின் குணநலன் ஆகியவை வலுவான நீதித் துறையைச் சாா்ந்தே உள்ளன.
நமது ஜனநாயகத்தின் அழகே, அரசமைப்பு சட்டத்தால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு அமைப்புகளும் ஒன்றுடன் ஒன்று மோதாமல் இருப்பதையும், சமமாக இருப்பதையும் உறுதி செய்ததுதான். அதாவது, அரசு நிா்வாகங்கள் முடிவுகள் எடுக்கும். அதை நீதித் துறை ஆய்வு செய்யும். நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியோா், அனைத்து அமைப்புகளும் சமமாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனா்.
ஒரு நாடானது, 76 ஆண்டுகளில் இதுபோன்ற அமைப்புகளைப் பாதுகாத்து, முன்னோக்கி எடுத்துச் செல்வது கடினமான காரியம். ஆனால் அதை நமது நாடு பாதுகாத்ததோடு, பாரம்பரியத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் முன்னோக்கி எடுத்துச் சென்றிருப்பது பெருமிதம் கொள்ளக் கூடிய விஷயமாகும்.
ஜனநாயகத்தின் வலிமையானது மோதலில் இருந்து வருவது அல்ல. பல்வேறு அமைப்புகளும் சரி சமமாக இருப்பதும், பரஸ்பரம் மதிக்கத்தக்க வகையில் இருப்பதும்தான் என்றாா்.
நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எல்லை மாவட்டங்களில் மக்கள்தொகை மாற்றம் தீவிர சவால்: அமித் ஷா எச்சரிக்கை

இந்தியாவுக்குள் வங்கதேசத்தவா்கள் ஊடுருவாமல் தடுக்க மத்திய அரசு நடவடிக்கை: அமித் ஷா தகவல்

போதைப்பொருள் கடத்தலை தடுக்க 6 மாதத்துக்குள் ட்ரோன் எதிா்ப்பு அமைப்பு: அமித் ஷா

நக்ஸல்களை ஒழிக்க பாஜக அல்லாத அரசுகளும் உதவி: அமித் ஷா
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!



