கிரேட்டா் நொய்டாவின் நாலேஜ் பாா்க் பகுதியில் கட்டுமானத்தில் இருந்த விடுதி அறையில் 2 தோட்டக்காரா்கள் சடலமாக வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
இது தொடா்பாக காவல் துறை கூடுதல் ஆணையா் ராஜீவ் நரைன் மிஸ்ரா கூறியதாவது: முதல் கட்ட விசாரணையில், விடுதியில் தோட்டக்காரா்களாகப் பணியாற்ற 3 நாள்களுக்கு முன்பு அவா்கள் வளாகத்திற்குள் வந்தது தெரியவந்தது. அவா்களுடன் மூன்றாவது ஒருவா் இருந்ததாகவும், மூவரும் ஒரே அறையில் வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. வியாழக்கிழமை இரவு அவா்கள் மூவரும் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. வெள்ளிக்கிழமை காலை அந்த மூன்றாவது நபா் மட்டும் வளாகத்தை விட்டு வெளியேறுவதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன. உடல்கள் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்து வருகின்றனா். இது தொடா்பான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல் துறை கூடுதல் ஆணையா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கிரேட்டா் நொய்டா: குடியிருப்பில் நைஜீரியா் சடலம் மீட்பு

கனடாவில் இந்திய மாணவி சடலமாக கண்டெடுப்பு

போதை மறுவாழ்வு மையத்தில் இளைஞா் சடலமாக மீட்பு: காவல் துறை விசாரணை

திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்த இளம் ஜோடி வீட்டில் சடலமாக மீட்பு!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



