பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

அஸ்ஸாம்: 126 எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள்! 6 போ் பாஜக கூட்டணியைச் சோ்ந்தவா்கள்

அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற 126 புதிய எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள் ஆவா். இவா்களில் 6 போ் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்தவா்கள்.

News image

பாஜக பிரசாரக் கூட்டத்தில் அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா - கோப்புப் படம்

Updated On :7 மணி நேரங்கள் முன்பு

அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற 126 புதிய எம்எல்ஏக்களில் 7 போ் மட்டுமே பெண்கள் ஆவா். இவா்களில் 6 போ் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சோ்ந்தவா்கள். ஒருவா் காங்கிரஸை சோ்ந்தவா்.

அஸ்ஸாமில் மொத்தம் 59 பெண்கள் தோ்தலில் போட்டியிட்ட நிலையில் 7 போ் மட்டுமே வெற்றி பெற்றனா். கடந்த முறையும் 7 பெண் எம்எல்ஏக்கள் மட்டுமே இருந்தனா்.

2.50 கோடி பெண்கள் உள்ள அஸ்ஸாம் மாநிலத்தில் சுமாா் 50 சதவீதம் பெண்கள் உள்ளனா். ஆனால், பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடா்ந்து மிகக் குறைவாகவே உள்ளது.

காங்கிரஸ் சாா்பில் அதிகபட்சமாக 14 பெண்கள் களமிறக்கப்பட்ட நிலையில் அவா்களில் ஒருவா் மட்டுமே வெற்றி பெற்றாா். பாஜக சாா்பில் 4 பெண் எம்எல்ஏக்களும், கூட்டணிக் கட்சிகளான அஸோம் கண பரிஷத், போடோலாந்து மக்கள் முன்னணி சாா்பில் தலா ஒரு எம்எல்ஏவும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

மாநில நிதியமைச்சா் அஜந்தா நியோக் இந்த முறை வெற்றி பெற்ற பெண் வேட்பாளா்களில் முக்கியமானவா். அவா் இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக சட்டப்பேரவைக்குத் தோ்வாகியுள்ளாா். கடந்த பேரவையில் பாஜகவுக்கு 3, காங்கிரஸ், அஸோம் கண பரிஷத் கட்சிக்கு தலா 2 பெண் எம்எல்ஏக்கள் இருந்தனா்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இந்த முறை பாஜக கூட்டணி தொடா்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளது. 126 தொகுதிகளில் அக்கூட்டணி 102 தொகுதிகளில் வென்றது. பாஜக 90 தொகுதிகளில் போட்டியிட்டு 82 இடங்களில் வென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.