ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மேற்கு வங்கத்தில் வரலாறு படைக்கும் பாஜக! முதல்முறையாக ஆட்சியமைக்கிறது!

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்க உள்ளது பற்றி....

BJP Makes History in West Bengal, Forms Government for the First Time

கோப்புப் படம் - DIN

Published On :4 மே 2026, 1:27 pm IST

மேற்கு வங்கத்தில் மமதாவின் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்தி பாஜக முதல்முறையாக ஆட்சியமைக்கவிருக்கிறது.

மேற்கு வங்கத்தில் ஆளும் மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சியான பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி என 4 நான்கு முனைப் போட்டி நிலவியது.

தொடர்ந்து 4 ஆவது முறையாக மமதா பானர்ஜி ஆட்சியமைக்க கடுமையான பிரசாரம் செய்தார். அதேபோல முதல்முறையாக ஆட்சியமைக்க பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டது.

அதன்படியே பெரும்பாலான கருத்துக்கணிப்புகளின்படி பாஜக பெரும்பான்மை இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது.

பிற்பகல் 1 மணி நிலவரப்படி பாஜக 193 இடங்களில் முன்னிலை பெற்று வருகிறது. திரிணமூல் காங்கிரஸ் 95 இடங்களிலும் முன்னிலையில்உள்ளது. இடதுசாரி 3 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் ஒருதொகுதியில்கூட தற்போது முன்னிலையில் இல்லை.

மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் பெரும்பான்மைக்குத் தேவை 148 இடங்கள். பாஜக இந்த பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால் ஆட்சியமைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மேற்குவங்கத்தில் கடந்த தேர்தலில் 77 இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற பாஜக, இந்த முறை முதல்முறையாக ஆட்சியமைக்கிறது. இதன் மூலமாக மேற்குவங்கத்தில் பாஜக வரலாறு படைக்கிறது.

Summary

BJP Makes History in West Bengal, Forms Government for the First Time

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.