கேரளத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம், கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 உதவித் தொகை வழங்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்து பிரசாரம் தீவிரமடைந்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி பிரசாரம் மேற்கொண்ட நிலையில், ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் நாளாக இன்று பிரசாரம் செய்து வருகிறார்.
கோழிக்கோட்டில் இன்று பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி,
“கேரள பெண்களையும் அவர்களின் எதிர்காலத்தை நாங்கள் பாதுகாக்கப் போகிறோம். ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சிக்கு வந்தவுடன் பெண்கள் இலவச பேருந்தில் பயணத் திட்டம் கொண்டு வரப்படும். கல்லூரி செல்லும் அனைத்துப் பெண்களுக்கும் மாதம் தலா ரூ. 1,000 வழங்கப்படும்.
முதியோர் ஓய்வூதியம் ரு. 3,000 வழங்கப்படும், அதற்காக தனி அமைச்சகம் உருவாக்கப்படும். இளைஞர்கள் தொழில் தொடங்க வட்டியில்லாமல் ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். உம்மன் சாண்டி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 25 லட்சம் காப்பீடு வழங்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஏற்கெனவே பெண்கள் இலவச பேருந்து பயணத் திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டங்கள் அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Free bus travel for women, ₹1,000 per month for female students! Rahul's promise in Kerala!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிபிஎஸ்இ-ஓஎஸ்எம் குளறுபடி: வெளிக்கொணர்ந்த இளைஞருக்கு ராகுல் பாராட்டு

மோசமான வானிலை! உத்தரகண்டில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்!

முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளுக்கு ராகுல் காந்தி வாழ்த்து!








