மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மேற்காசிய நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்க கட்டுப்பாடு என போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சூழலைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறை அமைச்சா்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்காசியாவில் மோதல் நீடிக்கும் கால அளவைப் பொருத்தே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் அந்நிய முதலீடுகளில் ஏற்படும் தாக்கத்தைக் கூற முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்

மேற்காசிய பதற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு உதவும் நிதிச்சூழல் உள்ளது: நிா்மலா சீதாராமன்

மேற்காசிய போா் பதற்றம் கடும் சவாலை எதிா்கொள்ளும் கரூா் ஜவுளித் தொழில்

மேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


