பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து திங்கள்கிழமை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக அவருடைய எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:
“நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. இந்தியா - நெதர்லாந்து உடனான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்.
குறைக்கடத்திகள், மாபெரும் நீர் திட்டங்கள், பசுமை ஹைட்ரஜன் மற்றும் திறமையாளர் இடப்பெயர்வு போன்ற துறைகளில் நமது கூட்டாண்மையின் சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்தோம்.
மேலும், மேற்கு ஆசிய நிலவரம் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதோடு, அப்பகுதியில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைவில் மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தி பேசினோம்” எனத் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய போர் தொடர்ந்து வரும் நிலையில், இந்தியா உள்பட உலகின் பல நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Prime Minister Narendra Modi posted on the X platform on Monday regarding the talks he held with Netherlands Prime Minister Rob Jetten.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி

நாகர்கோவில் வந்தார் பிரதமர் மோடி!
மார்ச் 31-ல் குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி! ரூ.5,295 கோடி வளர்ச்சித் திட்டங்கள் தொடக்கம்!

பிரதமர் மோடி 100% டிரம்ப்பின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கிறார்! -ராகுல் காந்தி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


