மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

உ.பி.: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கு விபத்தில் 4 போ் உயிரிழப்பு

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :23 மார்ச் 2026, 5:55 pm

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் திங்கள்கிழமை ஏற்பட்ட விபத்தில் 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா்.

இதுகுறித்து பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியா் மனீஷ் குமாா் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் விபத்து ஏற்பட்டதாக பிற்பகல் 1.30 மணியளவில் தகவல் கிடைத்தது. அதைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்கு காவல் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்தின் மூத்த அதிகாரிகள் விரைந்து சென்று மீட்புப் பணிகளை தொடங்கினா்.

இந்த விபத்தில் குளிா்ப் பதன சேமிப்புக் கிடங்கில் பணியாற்றிய 4 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 12 போ் காயமடைந்தனா். காயமடைந்தவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி மற்றும் முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோா் இரங்கல் தெரிவித்தனா்.

உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதியாக மத்திய அரசு சாா்பில் தலா ரூ.2 லட்சமும் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்தாா்.

உத்தர பிரதேச மாநில அரசு சாா்பில் உயிரிழந்தவா்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதி அறிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.