மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுவது பற்றி...

News image

பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 10:11 am

எரிபொருள் தட்டுப்பாடு பற்றி மூத்த அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா - இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாடு முழுவதும் எரிபொருள் இடையூறு இல்லாமல் கிடைப்பதையும் முறையான விநியோகத்தை உறுதிசெய்வதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ள இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

எரிபொருள் தட்டுப்பாடின்றி கிடைக்க மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றது. நுகர்வோர் மற்றும் தொழில்துறையின் நலன்களைப் பாதுகாக்க உலகளாவிய நிகழ்வுகளை இந்த அரசு தொடர்ந்து கண்காணித்து வருகின்றது என அமைச்சரவை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

”மேற்கு ஆசியாவில் நடைபெற்று வரும் போர் உலகளாவில் எரிசக்தி தட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது. இது நமது நாட்டிற்கும் ஒரு மிக முக்கிய சோதனையாக அமைந்துள்ளது. இச்சூழலை அமைதி, பொறுமை, பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலமே கையாள வேண்டும்.

விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளைச் சமாளிக்கும் வழிமுறைகளைக் கண்டறிய தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி சில நாள்களுக்குமுன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று நடக்கவிருப்பதாகச் சொல்லப்படும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர் தொடங்கிய பிப்ரவரி 28 முதல் சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார். பஹ்ரைன், குவைத், ஜோர்டன். ஃபிரான்ஸ், மலேசியா, இஸ்ரேல் மற்றும் ஈரானைச் சேர்ந்த தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

Summary

Modi calls ministerial meeting to review energy situation

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.