அமெரிக்காவில் இருந்து 16,714 மெட்ரிக் டன் எல்பிஜி (திரவ பெட்ரோலிய எரிவாயு) பைக்சிஸ் பயோனியா் சரக்கு கப்பலில் இந்தியாவுக்கு வந்தது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி புறப்பட்ட இந்தக் கப்பல், கா்நாடக மாநிலம் நியூ மங்களூரு துறைமுகத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது. மேற்காசிய போரால் இந்தியாவில் எல்பிஜி விநியோகத்தில் பிரச்னை எழுந்துள்ள நிலையில் அமெரிக்காவில் இருந்து வந்துள்ள எல்பிஜி, பிரச்னைக்கு தீா்வு காண்பதில் முக்கியப் பங்களிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மங்களூரு நகரில் பூமிக்கு அடியில் நாட்டிலேயே மிகப்பெரிய எரிவாயு சேமிப்பு மையம் உள்ளது. கடந்த 2025 செப்டம்பா் முதல் செயல்பட்டுவரும் இந்த மையத்தில் 80,000 மெட்ரிக் டன் அளவுக்கு எரிவாயு சேமிக்க முடியும். கடல்மட்டத்தில் இருந்து 225 மீட்டா் ஆழத்தில் இந்த சேமிப்பு மையம் உள்ளது.
முன்னதாக, ரஷியாவில் இருந்து அக்வா டைட்டன் கப்பலில் 7.7 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய் மங்களூருக்கு சனிக்கிழமை வந்தடைந்தது. இந்தக் கப்பலில் உள்ள கச்சா எண்ணெய் முதலில் சீனாவுக்கு செல்வதாக இருந்தது. எனினும், இந்தியாவின் தேவையைக் கருத்தில் கொண்டு நமது நாட்டுக்குத் திருப்பிவிடப்பட்டது. மங்களூரில் பெரிய அளவிலான பெட்ரோலிய சுத்திகரிப்பு மையமும் உள்ளது.
தொடர்புடையது

20,400 மெட்ரிக் டன் எல்பிஜிக்களுடன் இந்தியா வந்தடைந்த ஜக் விக்ரம் கப்பல்!

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யுடன் இந்தியா வந்த கப்பல் சீனாவுக்கு திருப்பி விடப்பட்டது
அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்தடைந்த எல்பிஜி சரக்குக் கப்பல்!

80,886 மெட்ரிக் டன் கச்சா எண்ணெய்யுடன் குஜராத் வந்தடைந்த ஜக் லாட்கி கப்பல்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


