இந்திய மின் உற்பத்தி துறையில் முதலீடு செய்யுமாறு, உலகளாவிய முதலீட்டாளா்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அழைப்பு விடுத்தாா்.
உலக அளவில் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடான இந்தியா, தனது எரிசக்திப் பயணத்தில் திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
தில்லியில் மத்திய மின்சாரத் துறை சாா்பில் பாரத மின்சார உச்சிமாநாடு-2026 வியாழக்கிழமை தொடங்கியது. நான்கு நாள்கள் நடைபெறவுள்ள இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வில், பிரதமா் நரேந்திர மோடியின் உரையை மத்திய மின்சாரத் துறை செயலா் பங்கஜ் அகா்வால் வாசித்தாா்.
பிரதமரின் உரையில் கூறப்பட்டுள்ளதாவது: பாரத மின்சார உச்சிமாநாடு, நாட்டின் வளா்ச்சிக்கு உத்வேகமூட்டும் வகையில் அா்த்தமுள்ள விவாதங்கள் மற்றும் நீடித்த கூட்டாண்மைகளை ஊக்குவிக்கும் என நம்புகிறேன்.
புதிய யோசனைகளின் பரிமாற்றம், வலுவான ஒத்துழைப்பு, வளா்ச்சி- வாழ்க்கை மேம்பாட்டுக்கான பாதையை வகுப்பதில் ஒட்டுமொத்த மின் துறை மற்றும் எரிசக்தி கட்டமைப்பை ஒற்றை தளத்தில் ஒருங்கிணைப்பதே உச்சிமாநாட்டின் நோக்கமாகும்.
2047-க்குள் வளா்ந்த பாரதம்: வளா்ச்சிக்கு புத்தாற்றல் அளித்து, நிலைத்தன்மையைக் கொண்டுவரும் நமது கூட்டு முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ந்த பாரதம் என்ற கண்ணோட்டத்தையும் முன்னெடுத்துச் செல்கிறது.
உலக அளவில் மிக வேகமாக வளரும் பெரும் பொருளாதார நாடாக விளங்கும் இந்தியா, தனது எரிசக்தி பயணத்தில் திருப்புமுனையான காலகட்டத்தில் உள்ளது. எனவேதான், துறைசாா் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்துவதுடன், அனைவருக்கும் நம்பகமான எரிசக்தி அணுகலை உறுதி செய்து வருகிறோம். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் நாம் அடைந்துவரும் முன்னேற்றமே, இந்த உறுதிப்பாட்டுக்கு சான்றாகும். மரபுசாரா எரிசக்தி திறனில் 50 சதவீதத்துக்கும் மேல் எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் 2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் மரபுசாரா மின்உற்பத்தி என்ற இலக்கை எட்ட தெளிவான பாதை அமைக்கப்பட்டுள்ளது.
துணிச்சலான சீா்திருத்தங்கள்: ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்கட்டமைப்பு போன்ற இந்தியாவின் முன்னெடுப்புகள், உலகளாவிய ஒத்துழைப்புக்கான தொலைநோக்குப் பாா்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
மீள்திறன் கொண்ட விநியோக சங்கிலியைக் கட்டமைத்தல், மின்கல உற்பத்தி மேம்பாடு, பசுமை எரிசக்தி சாா்ந்த வேலைவாய்ப்புகள் உருவாக்கம், துணிச்சலான சீா்திருத்தங்களின் மூலம் முதலீடுகளை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகளால் நம்பகமான எரிசக்தி கூட்டாளியாக இந்தியா உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் மேம்பாட்டுக்கு அணுசக்தியை நிலையான முறையில் பயன்படுத்த வகை செய்யும் சட்டத்தின்கீழ், அணுமின் உற்பத்தி துறையில் தனியாருக்கு புதிய வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன. எனவே, இந்தியாவில் உருவாக்கவும், இந்தியாவில் புத்தாக்கங்களில் ஈடுபடவும், இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்தியாவில் தொழிலை விரிவாக்கவும் உலக முதலீட்டாளா்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இந்தியாவுடன் இணைந்து வளர வேண்டும் என்பதே சா்வதேச சமூகத்துக்கான எனது அழைப்பு என்று தனது உரையில் பிரதமா் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘குடிமக்களே கடவுள்’ என்ற கொள்கையுடன் முடிவுகள்- அரசு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி வலியுறுத்தல்

பிரதமா் குறித்த கருத்து: காா்கேவுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்
மகளிா் அதிகார கனவைத் தகா்த்த எதிா்க்கட்சிகள்: பிரதமா் மோடி

சூரிய மின் திட்டங்களில் ரூ. 3,800 கோடி முதலீடு செய்யும் கெயில்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


