இன்றைய பங்குச் சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு 7.6 டிரில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று (மார்ச் 19) காலை 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 புள்ளிகளாக வர்த்தகம் தொடங்கியது. மேலும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 புள்ளிகளாக வர்த்தகத்தை தொடங்கியது.
இன்றைய பங்குச் சந்தையின் முதல் ஒரு மணிநேரத்திலேயே சுமார் 7.64 டிரில்லியன் ரூபாய் என்ற அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டது. முந்தைய நாள் (மார்ச் 18) வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனமானது, ரூ. 438.63 டிரில்லியன் என்று இருந்த நிலையில், இன்று ரூ. 430.99 டிரில்லியனாகக் குறைந்தது. அதாவது, 7.64 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
பங்குச் சந்தை வீழ்ச்சிக்கான காரணம் என்ன?
இந்த வாரத்தின் முதல் மூன்று நாள்கள் ஏற்றத்துடன் தொடங்கிய பங்குச் சந்தைகள், மேற்காசிய நாடுகள் போர்ப் பதற்றம் காரணமாக இன்று சரிவை சந்தித்துள்ளன.
கத்தார், செளதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட 9 நாடுகளின் எரிபொருள் உற்பத்தி மையங்களை குறிவைத்து ஈரான் நேற்றிரவு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய எல்பிஜி உற்பத்தி ஆலையில் தீப்பற்றி பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகள் எரிபொருள் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.
இதன்காரணமாக, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய்யின் விலை 110 டாலரைக் கடந்துள்ளது.
இந்த நிலையில்தான், சர்வதேச அளவில் இன்று பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.
Summary
Stock Market Crash: Investors Lose Rs 7.6 trillion In An Hour
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்புமிக்க 8 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 4.13 லட்சம் கோடியாக உயர்வு!

பங்குச் சந்தை ஏற்றம்: சென்செக்ஸ் 918.60, நிஃப்டி 275.50 புள்ளிகள் உயர்வு!

மதிப்புமிக்க 6 நிறுவனங்களின் சந்தை மூலதனம் ரூ. 65,000 கோடியாக சரிவு!
ஒரு மணி நேரத்தில் ரூ.10 லட்சம் கோடி இழப்பு! டிரம்ப்பின் போர் உரை எதிரொலி!!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


