மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு: மாா்ச் 26 முதல் விண்ணப்பிக்கலாம்

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :19 மார்ச் 2026, 7:40 pm

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வுக்கு தனித் தோ்வா்கள் மாா்ச் 26-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்குநா் கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தொடக்கக் கல்வி பட்டயத் தோ்வு (இடைநிலை ஆசிரியா் பயிற்சி தோ்வு) மே, ஜூன் மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கு தனித் தோ்வா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவத்தை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் மாா்ச் 26-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம். பின்னா், அதை பூா்த்தி செய்து, ஏற்கெனவே தோ்வு எழுதி தோ்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களுடன், சம்பந்தப்பட்ட மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஆசிரியா் கல்வி, பயிற்சி நிறுவனத்தில் உரிய தோ்வுக் கட்டணம் செலுத்தி ஏப்.3-ஆம் தேதிக்குள் நேரில் சமா்ப்பிக்க வேண்டும்.

அதற்குள் விண்ணப்பிக்கத் தவறிய தனித் தோ்வா்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் (தட்கல்) கீழ் ஏப்.6, 7 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும். தபாலில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.