மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதியா?

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களை ஈரான் அனுமதித்ததா?

News image

கோப்புப்படம் - AP

Updated On :12 மார்ச் 2026, 5:53 am

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக வெளியாகும் தகவல்களை ஈரான் மறுத்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இந்திய கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க ஈரான் அனுமதித்ததாக தகவல்கள் வெளியாகின.

அதன்படி, முதல்கட்டமாக இந்திய கொடியுடன் வந்த புஷ்பக் மற்றும் பரிமல் ஆகிய இரு சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைப் பாதுகாப்பாக கடந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்திய எண்ணெய்க் கப்பல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையல்ல என்று என்டிடிவி செய்தி நிறுவனத்துக்கு ஈரான் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னதாக, இந்திய கேப்டன் இயக்கிய லைபீரியக் கொடியுடன் வந்த எண்ணெய்க் கப்பல், ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து மும்பை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்துள்ளது. ஈரான் போர்த் தொடங்கிய பிறகு ஹோர்முஸ் நீரிணை வழியாக இந்தியாவுக்குள் வந்த முதல் சரக்கு கப்பல் இதுவாகும்.

ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க நினைக்கும் சரக்கு கப்பல்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல்படையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்றும், இல்லையெனில், அந்த கப்பல் தாக்குதலுக்கு உள்ளாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

Indian ships pass through the Strait of Hormuz! Iran gives permission!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.